டெல்லி:-
எல்லையில் இந்திய சீனா மோதல் எதிரொலியாக மத்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்துள்ளது. இவற்றில் டிக்டாக், ஹலோ, வீ சேட் உள்ளிட்ட முன்னணி மொபைல் செயலிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு (sovereignty and security) காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2009 தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) 69A பிரிவின் கீழ் இந்த தடை உத்தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு தடை செய்துள்ள 59 சீன செயலிகள்:-
சீனாவின் மிகப் பிரபலமான செயலியான டிக்டாக் ஆப்பிள் ப்ளேஸ்டோர் மற்றும் கூகுள் பிளேஸ்டோர் ஆகிய இரண்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 119 மில்லியன் மக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே டிக் டாக் செயலின் பங்குதாரர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தங்களது செயலின் தனிநபர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசிடம் விளக்கம் உள்ளார்கள்.