உலகின் சிறந்த மருந்தகமாக இந்தியா திகழ்வது, 75 ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், இந்தியாவின் நான்கு சாதனைகள் குறித்து விளக்கினார். போலியோ நோயை முழுமையாக ஒழித்தது, பிற வைரஸ்களுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது, தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தது, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு ஆகியவை இந்தியாவை உலகின் சிறந்த மருந்தகங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.
இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் இந்தியா உட்பட கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்குவதைப் பாதித்துள்ளது. காசநோய் மற்றும் தொற்று அல்லாத பிற நோய்கள், மகப்பேறு பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சேவைகளை வழங்குதல் போன்றவற்றில் இந்தியா தவறிவிட்டது என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) கருத்துப்படி, ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் ஒரு பெரிய பிரச்சனையாகும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதனால் இறக்கின்றனர். கோவிட் தொற்று ஆயிரக்கணக்கான குடும்பங்களை வறுமைக்கு தள்ளியதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை மேலும் தீவிரமாக்குவதாகவும் கூறினார்.
வல்லுநர்கள் இந்த தகவலை பகுப்பாய்வு செய்து, காசநோய் மற்றும் வறுமை தொடர்பான நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்