தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சர்வதேச விமானங்களுக்கான தடையை அடுத்த மாதம் வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச அளவிலான விமான சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமைக்ரான் அதிவேகமாக பரவத்தொடங்கியதை அடுத்து, சர்வதேச விமான சேவைகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வருகிறது. விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய போதும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. எனவே சர்வதேச விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து சிவில் விமானப்போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.