தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய வீரர்கள் துல்லியத் தாக்குதல் மூலம் அழித்தனர். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு இந்தியா நடத்திய தாக்குதல் எச்சரிக்கையை விடுத்தது என்று ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய புதிய தளபதி நரவானே, எல்லையைத் தாண்டி வந்தும் இந்தியா தீவிரவாதிகளை அழிக்க முடியும் என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருப்பதாக தெரிவித்தார்.எதிர்காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பாகிஸ்தான் நிறைய சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த தாக்குதல்கள் ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்த தாக்குதல்களின் போது அணு ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமே எழவில்லை என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.