டோக்கியோ
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெங்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
968 முதல் 2016 வரைக்கும் பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெங்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெக்காராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.
பிரதமர் மோடி
இந்திய விளையாட்டு வரலாற்றில், பாராஒலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டுகள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் இந்த சாதனை.
அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை இது போன்ற விளையாட்டுக்கு ஊக்குவிக்கும். இந்தியா வென்ற வரலாற்றுப் பதக்கங்களின் எண்ணிக்கை எங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் குடும்பங்கள் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை நான் பாராட்ட விரும்புகிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெங்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று சாதனை படைத்ததன் மூலம் பதக்கப் பட்டியலில் 24 வது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது