இந்தியா

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி பாரத் பயோடெக் கண்டுபிடிப்பு: அறிவிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:-

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை சோதனை மேற்கொள்ள ஒப்புதல் கிடைத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிப்பிதுங்கி நிற்கின்றன. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு, 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பல்வேறு சோதனை நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இன்றுவரை முழுமையான கொரோனா தடுப்பு ஊசி கண்டறியப்படவில்லை.

ALSO READ  10,12 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ஹைதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) உடன் இணைந்து ‛கோவேக்சின்’ (Covaxin TM) என்ற தடுப்பு மருத்தை தயாரித்ததாக தெரிவித்துள்ளது. 

இந்த தடுப்பூசியை, அடுத்த மாதம் (ஜூலை), நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் (DCGI) ஒப்புதலை பெற்றுள்ளது.

மேலும், இந்த தடுப்பு மருந்தை பாரத் மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது.

ALSO READ  இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

முன்னதாக, புனேவில் கொரோனா வைரஸ் கிருமியை ஆய்வாளர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர்.

இது குறித்து பாரத் பயோடெக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா கூறுகையில்:-

முதற்கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவையாக இருக்கின்றன. மேலும் சோதனை முடிவுகள் விரிவான பாதுகாப்பு மற்றும் பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுகின்றன, என்றார். கோவேக்சின் தவிர, பாரத் பயோடெக் நிறுவனமானது, ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான ப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்க உள்ளது. புதிய தடுப்பூசியை உருவாக்குவதற்காக பிலடெல்பியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்துடன் பிரத்யேக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இளம் செஸ் வீரர் பிரக்னானந்தா…!

naveen santhakumar

தூக்கில் தொங்கிய இளைஞர்; புதுச்சேரியில் பரபரப்பு !

News Editor

உ பி சட்டசபை தேர்தல் : பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்க முடிவு – பிரியங்கா காந்தி அறிவிப்பு

News Editor