ஜப்பான்
டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான டேபிள் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா பட்டேல் வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவுக்கான பதக்கப் பட்டியலை தொடக்கி வைத்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா பட்டேல், சீன வீராங்கனை மியாவோ ஜாங்குக்குவை எதிர்கொண்டார். இறுதியாக 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
.
இன்று காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவின் ஜோவ் யிங்குடன் இந்தியாவின் பவினா மோதினார். இதில், 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை துவக்கி வைத்தார்.
இந்திய நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பவினாவின் அசாத்திய திறமையும், உறுதியும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக புகழ்ந்துள்ளார். இதேபோல் இந்திய நாட்டின் பிரதமர் மோடியும், பவினா பட்டேல் சரித்திரம் படைத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.