புது டெல்லி
தேசிய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. எஸ். இக்பால் சிங் லால்புரா பதவி மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ். இக்பால் சிங் லால்புரா பஞ்சாப் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். அதன்பின் பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருவதோடு பா.ஜ க. செய்தித்தொடர்பாளராகவும் செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ். இக்பால் சிங் லால்புரா 1978ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிரங்காரி மோதல் நடந்தபோது அந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர். சீக்கிய சமயத் தலைவர் ஜர்னைல் சிங்கை 1981ஆம் ஆண்டில் கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
தேசிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புரா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.