இந்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டை விட்டு வெளியேர முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் மோடி யோகாவின் நன்மைகளை விளக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
நேரம் கிடைக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறையாவது தான் நித்திரை யோகா செய்கிறேன். இதை செய்வதனால் மனம் அமைதியடைகிறது மன அழுத்தம் மற்றும் கவலைகள் குறைகிறது என அதனால் விளையும் பயன்கள் குறித்தும் அந்த பதிவில் விளக்கியிருந்தார்.
மேலும் எவ்வாறு நித்திரை யோகா செய்வது என்பது குறித்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் விளக்கும் வீடியோவின் இணைப்பையும் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ இந்தியர்களை கவர்ந்தது விட இவங்க டிரம்பை அதிகம் கவர்ந்துள்ளது.
ஆம், யோகா நித்ரா குறித்து வீடியோ பதிவிட்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள இவாங்கா ட்ரம்ப், இது மிகவும் அர்புதமானது, இதனை பகிர்ந்தமைக்காக நன்றி என மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.