டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வந்து, தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதர் குறித்த சில தகவல்கள்!
நீதிபதியும் முரளிதர் ஆகஸ்ட் 8 1961ஆம் ஆண்டு பிறந்தார்
1984 ஆம் ஆண்டு சென்னையில் பயிற்சி வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.
இவர் முக்கியமாக ஆரம்பத்தில் அறியப்பட்டது. 1984-ம் ஆண்டு ஏற்பட்ட போபால் விஷவாயு வழக்கில்.
இவர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று வாதாடினார்.
1986 ஆம் ஆண்டு ஹாஷிம்பரா படுகொலை வழக்கில் உத்தரப்பிரதேச ஆயுதப் படைப் பிரிவைச் சேர்ந்த போலீசாரே கலவரத்திற்கு காரணம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கி போலீசாரை குற்றவாளி என அறிவித்தார்.
‘மை லார்ட்’, ‘யுவர் ஹானர்’ போன்ற நீதிபதிகளை போற்றும் வகையிலான நடைமுறைகளை கடுமையாக எதிர்த்தவர்.
2009-ம் ஆண்டே ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் ஆலோசகராக இருந்துள்ளார்.
1984 சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் சஜ்ஜன்குமார் குற்றவாளி என தீர்பளித்தவர்.
2002-ம் ஆண்டு சட்ட ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கௌதம் நவ்லகா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
தற்போதைய டெல்லி வன்முறைக்கு போலீஸாரின் மெத்தனப் போக்கே காரணம் என்று கூறியவர்.
தற்போது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.