இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடக, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது.சமீபத்தில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா, கொரோனா நிலை கையை மீறி சென்று விட்டதாக கூறி பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, 14 நாட்கள் முழு ஊரடங்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கில், காலை ஆறு மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொது போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.