தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவின் ‘மெட்ரோ மனிதன்’ என அழைக்கப்படும் பிரபல பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன் கடந்த மாதம் 25 அம தேதி பாஜகவில் இணைந்தார். இவர் டெல்லியில் மெட்ரோ திட்டத்திற்குத் தலைமை வகித்தவர். மேலும் கொச்சி, லக்னோ ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மெட்ரோவிற்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். 1964 ஆம் ஆண்டு, புயலால் சேதமடைந்த பாம்பன் பாலத்தைச் சீரமைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஸ்ரீதரன் தற்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்டுள்ளார். ஸ்ரீதரன் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து 8 நாட்கள் கூட முடிவடையாத நிலையில், அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கேரளா அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.