இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கேரளா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுதப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “கேரளா கடுமையான சூழ்நிலையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா உறுதியாகும் சதவீதம் குறையவில்லை. இந்தச் சூழ்நிலையால் மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 8 ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து மே மாதம் 16 தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.