இந்தியா

பூதாகரமாக வெடிக்கும் லட்சத்தீவு விவகாரம்; முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது கேரளா 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவின் மிக சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு அழகிய கடற்கரை , இயற்கை எழில்  மரங்கள், சுத்தமான காற்று, பல பிரபலங்களின் சொர்க்கபூமி என தனக்கென  தனித்துவத்தை கொண்டுள்ளது. 

மீன்பிடித் தொழிலும், சுற்றுலாவும் இங்கு பிரதான தொழிலாக இருக்கிறது. லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லட்சத்தீவுகளின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வா் சா்மா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் காலமானாா்.

அதனையடுத்து,  இந்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது. இதற்கு முன்புவரை லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்.கள் மட்டுமே நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து அவர் கொண்டுவந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் அந்த ஊர் மக்களைப் பெரிதும் கவலையடையச் செய்திருக்கிறது. 

ALSO READ  வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ….

லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டத்தின்படி லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறப்பவர் மட்டுமே தீவுகளில் நிலம் வாங்க முடியும் எனும் உத்தரவு தளர்த்தப்பட்டு தற்போது யார் இங்கு வேண்டுமானாலும் இங்கு இடம்  வழிவகை செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்ட லட்சத்தீவுகளின் பிரதான உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றுக்கு தடை விதிப்பதற்கான முன்னெடுப்புகள் லட்சத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்தீவில் இதுவரை மதுபானங்களுக்கு தடை நிலவிவந்த நிலையில் தற்போது, மதுபான விற்பனையை தொடங்க முடிவெடுத்துள்ளது புதிய அரசு. முஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

ALSO READ  கமல் டிஸ்சார்ஜ்: கமல் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை

மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திரைபிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை லட்சத்தீவுக்கு ஆதரவாகவும், பிரஃபுல் கோடா படேலுக்கு எதிராகவும் குரல்களை எழுப்பினர்.

இந்தநிலையில் கேரளா சட்டமன்றத்தில், லட்சத்தீவு மக்களுக்கு ஒற்றுமையைத் தெரிவித்தும், பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் லட்சதீவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்றும் அந்த தீர்மானத்தில்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யுவராஜ் சிங் கைது- சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு – பின்னணி என்ன !

naveen santhakumar

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном времени Онлай

Shobika

2 மாத கர்ப்பிணி..3000 கிலோமீட்டரை 52 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்..என்ன காரணம்???

naveen santhakumar