கர்நாடகா:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக ஜூன்-7 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் போல் இல்லாமல் தற்போது பாதிப்பு குறைந்தாலும் தினசரி 15% பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பல கிராமப்புறங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதனால் அம்மாநில அரசு ஜூன்-14 வரை தற்போது அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல் இருக்கும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதியம் 2 மணி வரை நீடிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழும், மேலும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்தால் மட்டுமே தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 61 நாட்களில் பெங்களூரில் மொத்தம் 7.2 லட்சம் கோவிட் -19 வழக்குகள் மற்றும் 8,716 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் அலை கொரோனா தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.