சென்னை:-
கொரோனா கால நெருக்கடியால் விட்கோ சில்லறை விற்பனை குழுமம் மூடப்பட்டது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த விட்கோ சில்லறை விற்பனை குழுமம் மூடப்பட்டது. கொரோனா கால நெருக்கடி, வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவது குறைந்ததால் தொழிலில் நஷ்டம் என விட்கோ குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிரபலமான லக்கேஜ் நிறுவனமான விட்கோ கடந்த 1951 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் 500 சதுர அடியில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்தது. தற்போது அது தனித்த பிராண்டாக வளர்ந்து சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, கொச்சின், மும்பை, டில்லி என பல நகரங்களிலும் கிளைகளைப் பரப்பியது. லக்கேஜ் சந்தையில் சுமார் 60% அளவுக்குப் பரவி இருந்த விட்கோ மக்களின் அபிமான பிராண்டாக இருந்து வந்தது.
இந்நிலையில், விட்கோ மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.