டெல்லி:-
டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துணிகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்த தீ காற்றின் வேகத்தால் மளமளவென அடுத்த கடைகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை முதலில் 16 வாகனங்களில் நீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். எனினும், கொளுந்துவிட்டு எரிந்ததால் அதனை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் கடுமையாக முயற்சித்தனர்.
மேலும், 30 வாகனங்களை கொண்டு தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதனிடையே, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.