இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ‘மானசா வாரணாசி’ வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் கலந்துகொள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றிபெறுபவர்கள் அவ்வாண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்வார்கள்.
இந்நிலையில் தான் தற்போது மானசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 23 வயதான மானஸ வாரணாசி ஹைதராபாத்தில் பிறந்தது வளர்த்து பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர். அதனையடுத்து நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கல்வி பயிலும் காலம் முதல் மாடலிங் துறையில் செயல்பட்டு வந்த மானசா, இவ்வாண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டார்.
இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் மிஸ் இந்தியா 2020 வெற்றியாளராக மனசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டார்.
இவரையடுத்து உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மன்யா சிங் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் மானசா வாரணாசி இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளார்.