தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த தகவலை மேகாலயா மாநில முதல்வரும் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிசெய்துள்ளார்.
மேலும் அதில் “நான் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருந்ததால் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த அனைவரையும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து கண்காணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தேவைப்பட்டால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்”. என்று தன்னுடைய பதிவின் மூலம் கூறியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.