ஜெய்பூர்:-
ராஜஸ்தானின் சஞ்சோர் (Sanchore) நகரில் வெள்ளிக்கிழமை அன்று வானத்திலிருந்து விண்கல் போன்ற பொருள் விழுந்துள்ளது.
வானத்திலிருந்து இந்த கல் விழுந்தபோது வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்த பெரும் சத்தம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொருள் விழுந்த இடத்தில், ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 2 கி.மீ. தொலைவுக்கு வெடி சத்தம் கேட்டுள்ளது. இதன் எடை 2.78 கிலோ கிராம் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் மற்றும் சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் பூபேந்திர யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த பொருள் விழுந்த மூன்று மணி நேரத்துக்கு பிறகும் வெப்பத்தை வெளியிட்டு வந்ததால், மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் அந்த விண்கல் குளிர்வடைந்த பின்னர், சஞ்சோர் நகரில் உள்ள நகைக்கடைக்கு சொந்தமான ஆய்வகத்தில் இந்தக் கல்லை வைத்து சோதனை செய்தனர்.
இந்த கல்லின் உலோக பண்புகள் (Metallic Properties)—
10.23 per cent of nickel,
Iron 85.86 per cent,
Platinum 0.5 per cent,
Cobbit 0.78 per cent,
Geranium 0.02 per cent,
Antimony 0.01 per cent
Niobium 0.01 and
Others 3.02 per cent