குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்ட
மேதா பட்கர் இந்தியாவில் மும்பையில் வசந்த் கனோல்க்கர் என்னும் தொழிலாளர் தலைவருக்கும், இந்து கனோல்க்கருக்கும் மகளாகப் பிறந்தார்.
இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார்.
இவர் Tata Institute of Social Sciences, இல் சமூக பணியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் இவர் ஏழு ஆண்டுகளாக தன்னார்வலர் நிறுவனங்களில் பணியாற்றினார்.மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான Right Livelihood விருது பெற்றார். 1999 ஆம் ஆண்டு Vigil India Movement நிறுவனத்தின் எம். (M.A.Thomas National Human Rights என்ற விருதையும் பெற்றார்.
மேலும் Deena Nath Mangeshkar விருது, Mahatma Phule விருது,1992இல் (Goldman Environment விருது, பிபிசி நிறுவனத்தின் மிகச்சிறந்த அனைத்துலக அரசியல் பரப்புரையாளருக்கான Green Ribbon விருது,பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமைக் காப்பாளர் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.