புது டெல்லி
உலக அளவில் கொரானா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு அனைத்து நாடுகளும் பரிதவித்து வருகின்றன. இச்சூழலில் கொரானா தொற்று ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே வழி என்ற நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒன்றிய அரசு கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள பரிந்துரைத்தது.இதுவரை சுமார் 40 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள் என அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதோடு பாதுகாப்பானது என்றும் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் தடுப்பூசி மாற்றிப்போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது