இந்தியா

“MeToo” பதிவில் தனது பெயரை மாணவி ஒருவர் பகிர்ந்தால் 14 வயது மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


குருகிராம்:-

டெல்லியில் பள்ளி மாணவர்கள் சிலர் சமூக இன்ஸ்டகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் (Bois Locker Room) என்ற குரூப்பை உருவாக்கி அதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து வந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் அடங்குவதற்குள் ஹரியானா மாநிலம் குர்கானில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவி ஒருவர் மீட்டு குறித்த பதிவில் தன்னுடைய பெயரை பதிவிட்ட நாள் 14 வயது மாணவன் ஒருவன் 11 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

 இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்:-

மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் MeToo தொடர்பாக பதிவில் இந்த மாணவன் தான் துன்புறுத்தப்படுவதாக பதிவிட்டிருந்தார்.  இதனை கண்ட மாணவன் தனது குடியிருப்பு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை தொடர்பான கடிதங்கள் எதுவும் சிக்கவில்லை ஆனால் மாணவனின் செல்போனை ஆராய்ந்ததில் அவனது நண்பர்கள் அவனுக்கு அனுப்பிய மெசேஜ் களில் நீ போலீஸிடம் மாட்டி விடுவாய் போலீசார் உன்னிடம் விசாரணை நடத்துவார்கள் நீ கைது செய்யப்படுவது உறுதி போன்ற மெசேஜ்களை அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து பயந்துபோன அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் சம்பந்தப்பட்ட மாணவியிடம் தற்கொலை செய்துகொண்ட மாணவனுக்கு மெசேஜ்களை அனுப்பி அவர்களது நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது என்றார்.

ALSO READ  படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த "பெரிய நடிகர்"; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஷாலு!  

அந்த மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட MeToo பதிவில்:-

நான் 2 வருடங்களுக்கு முன்பு துன்புறுத்தபட்டேன் (Molestation). இதை எனக்குள் இத்தனை நாட்களாக ரகசியமாக வைத்திருந்தேன் என்று பதிவிட்டு அந்த மாணவனின் பெயரையும் பதிவிட்டிருந்தார் முன்னதாக இந்த சம்பவம் அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் (Basement) நடைபெற்றதாக பதிவிட்டிருந்தார்.

ALSO READ  தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக நீதிபதி சந்திரசூட் நியமனம்!

 இந்தத் தற்கொலை சம்பவத்தை எதிர் வீட்டில் குடியிருக்கும் மாணவனின் நெருங்கிய நண்பன் பார்த்துள்ளான்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிஸர் தீபக் குமார் தலைமையில் Sector 53 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  

இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோர் புகார் அளிக்க மறுத்தனர் இதைத்தொடர்ந்து போலீசார் செக்சன் 174 கீழ் இந்த தற்கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தடயங்களை சோதித்த தடயவியல் நிபுணர் தீபக் மாத்தூர் கூறுகையில்:-

மாணவன் உடலில் ஏராளமான காயங்கள் ஏற்பட்டுள்ளது தலையில் ஏற்பட்ட காயத்தால் மாணவன் உயிர் வந்துள்ளான் என்று கூறினார்.

14 வயது பள்ளி மாணவன் ஒருவன் MeToo புகாரில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

104 வயதில் தேர்வில் முதலிடம் எடுத்து அசத்திய மூதாட்டி

News Editor

மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த ரிக்‌ஷா தொழிலாளி- நேரில் வாழ்த்திய மோடி.!!!

naveen santhakumar

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகிறது-UGC தகவல்

Shobika