கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் ஏழாம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தியாவில் பல மாநிலங்கள் பாரம்பரிய கைத்தறி தொழில்களுக்கு பெயர் பெற்றவை. ஆடை பொருட்கள் முதல் புடவைகள் வரை கைத்தறி நெசவாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
கைத்தறியாடை இந்தியர்களின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெய்தலில் கிட்டத்தட்ட 43 இலட்சம் மக்கள் ஈடுபடுகின்றனர். இது இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிகம்
உற்பத்தி செய்யப்படுகிறது.இத மூலம் கிராமப்புறங்களில் வருமானத்தை ஏற்படுத்தி தருகிறது. உலகெங்கும் உள்ள ஆடைகளில் 95 சதமான கைத்தறி ஆடைகள் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகின்றன.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஏழாம் நாளை தேசிய கைத்தறி தினமாக இந்திய நாட்டின் பிரதமரான மோடி அறிவித்தார். அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கைத்தறி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, நெசவாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் அதே வேளையில் நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு கைத்தறியின் பங்களிப்பிலும் இந்த நாள் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழகமெங்கும் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.