ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது, அதில்,” இந்தியாவின் அதிவேக 4ஜி சேவை வழங்கும் நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, interconnect usage charges (IUC) என்ற கட்டணத்தை நிர்ணயித்திருந்தது.
அதற்காக நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் மற்ற அழைப்புகளை மேற்கொள்ளும்போது தொலைதொடர்பு நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு வந்தது. ஜியோ நிறுவனமும், அதே தொகையை வசூலித்தது. ஆனால், அந்த கட்டணத்துக்கு ஈடாக நெட் டேட்டா வழங்கியது.
தற்போது, ஜனவரி 1 முதல், மற்ற நெட்வொர்க்குக்கான IUC அழைப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக TRAI அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து, இனி ஜியோ வாடிக்கையாளர்கள் தடையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.