தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி:
பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பிரதமர் மோடி வருகின்ற 10-ம் தேதி அடிக்கல் நாட்ட இருக்கிறார்.இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாராளுமன்ற கட்டிடம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
பாராளுமன்ற கட்டிடம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய பாராளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
பாராளுமன்ற கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்???? கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.