உத்தரபிரதேச மாநிலம் சுமத்திராவில் 3000 டன் அளவிலான தங்கம் இருப்பதாக கூறப்பட்டது உண்மை இல்லை இந்திய நில அளவியல் துறை அறிவிப்பு.
கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இரண்டு தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்; அவற்றிலிருந்து 3000 முதல் 3500 டன்கள் வரையிலான தங்கம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இந்த ஆய்வினை இந்திய நில அளவியல் துறையும் உத்தரபிரதேச சுரங்கவியல் இயக்குனரகமும் இணைந்து மேற்கொண்டது.
சோன்பத்ரா இதன் பண்டைய பெயர் சுவர்ண பத்திரா என்றும் இதன் பொருள் சுவர்ணம் (தங்கம்) பத்திரம் என்றும்; இங்கு பண்டைய காலங்களில் இருந்தே பல மடங்கு தங்கம் இருப்பதாக செவி வழி செய்திகள் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது 3000 டன் தங்கம் எதுவும் இல்லை என்றும், அங்கு இருக்கும் படிமங்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தால் மொத்தமே 160 கிலோ தங்கம் கிடைக்கும் என்று நில அளவியல் துறை கூறியுள்ளது.