சென்னை:
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மீண்டும் 15 ரூபாய் உயர்த்தியுள்ளன.
விலை உயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய வற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
இதில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றுகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதத்திற்கு 2 முறை மாற்றப்படுகிறது.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டு