இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்திலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நேற்று (01.05.2021) ஒரே நாளில் 8 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அரசு தெரிவித்துள்ளது..