காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தலைவர்கள் காந்தியின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திவருகின்றனர்.
மகாத்மா காந்தியின் 153- வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தேச தந்தையின் பிறந்தநாளில் நான் தலைவணங்குகிறேன். அவருடைய வாழ்க்கை, தத்துவங்கள், இந்திய மக்களின் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகத்தை ஏற்படுகிறது. ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலகளவில் பொருத்தமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செல்லுத்தினர். சா.கற்பகவிக்னேஷ்வரன்