பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
பஞ்சாபில் மொத்தமுள்ள 8 மாநகராட்சிகளில், 8 மாநகராட்சிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் பதிந்தா மாநகராட்சியில் 53 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மேலும் ஒரு மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. ஒரு மாநகராட்சியில் இன்று முடிவு அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில் தற்போது அதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.