புதுடெல்லி :
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2022 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவே 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் முறையாக அமுல் படுத்தாதனால் பெரும்பாலான இடங்களில் இன்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பொது மக்கள்லால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இத்தகைய கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் வரும் 2022 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி , இறக்குமதி , இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்யவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
2021 செப்டம்பர் மாதம் 30-ம் தேதி முதல் ,கட்டாயமாக பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 75 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது