டெல்லி:
மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகங்களில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
பிரதமர் மோடி இன்று (28 ம் தேதி) கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய குஜராத் மகாராஷ்டிரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி முதலாவதாக,அகமதாபாத்தின் அருகேயுள்ள சங்கோடர் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்து வரும் ஜைகோவ் – டி தடுப்பு மருந்து குறித்து மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்த மருந்து, தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
பின்னர் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் மருந்தை ஆய்வு செய்ய உள்ளார். இந்த மருந்து தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
மேற்கொண்ட ஆய்வு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.