நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.
இந்நிலையில் நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து அவருக்கு எக்மோர் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியாளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இவரின் இறப்பிற்கு திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நடிகர் விவேக்கின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை துக்கம் அடைய செய்துள்ளது அவரது நகைச்சுவை உணர்வும் வசனங்களும் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. திரைப்படங்கள் படங்கள் சொந்த வாழ்க்கை மூலம் சுற்றுச்சூழல், சமூகத்திற்கு குரல் கொடுத்தவர் நடிகர் விவேக். சினிமாவைப் போலவே சமூகத்தின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் அவருக்கு மிகுந்த அக்கறை இருந்தது . அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Corona #Coronavaccine #TamilThisai #Tamilcinema #Cinema #Cinemanews #Tamilnadu #Vivek #Kollywood #RIPviveksir #vairamuthu #Kamalhaasan #Tamilmovie #narendramodi #indiapm