இந்தியா

குடியரசு தலைவருக்கு கொரோனா தடுப்பூசி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு  செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. 

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அதனையடுத்து மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசு தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள், தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர். அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். 

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்தது டெல்லி அரசு !

#corona #coronavirus #covaxin #tamilthisai #primeminister #ramnatkovind #modi #amitsha #coronafightndia


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமாதியில் இருக்கும் சாமியார் உயிருடன் திரும்புகிறாரா?

Admin

ஆகஸ்ட் 31 வரை கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிப்பு- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்…. 

naveen santhakumar

ஜூன் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு… உண்மை என்ன?

naveen santhakumar