அகமதாபாத்
குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள், எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் இயற்கை வளர்ச்சியோடு கூடிய கற்றல் மற்றும் படைப்புத்திறனுக்கும் இடமளிக்க வேண்டும் என்பதோடு பொழுதுபோக்கு மற்றும் படைப்புத்திறனை ஒருங்கிணைக்கும் விதமாக அறிவியல் நகரம் அமைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஆசியாவிலேயே முன்னணி நீர்வாழ் உயிரினங்களின் காட்சியகம் அறிவியல் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகம் இன்னும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள நீர்வாழ் பல்லுயிர் தன்மையை ஒரே இடத்தில் காணக்கிடைப்பது சிறந்த அனுபவம் என்றார்.
எந்திரவியல் காட்சியகத்தில் ரோபோக்களுடன் உரையாடுவது வித்தியாசமான அனுபவமாகும். இது ரோபோடிக்ஸ் துறையில் நமது இளைஞர்கள் பணிபுரிவதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.