தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் தங்களின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள்ளது. இதில் தேசிய அளவிலான தலைவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதிமுக மாற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் ராகுல் காந்தி, பல கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாளை தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட இருந்தார். இந்தநிலையில் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை இரத்தாகியுள்ளது.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தனக்கு கொரோனா உறுதியாகவில்லை என்றாலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி பிரியங்கா காந்தி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் அவரது தமிழக வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது.
#Tamilnadu #priyankagandhi #congress #Raghulgandhi #Tamilnadu #TamilThisai #Corona #covid19 #DMk #TNelection2021 #Electionpropaganda #stalin