மகாராஷ்டிராவில் Pubg விளையாடிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pubg விளையாட்டு அறிமுகமானது முதல் வயது வித்தியாசம் இல்லாமல் 24 மணி நேரமும் அதில் மூழ்கி கிடப்பவர்கள் ஏராளம்.
இந்த விளையாட்டை தடை செய்ய கோரி கோரிக்கை எழுந்து வரும் வேளையில் இதனால் அசம்பாவித சம்பவங்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஹர்ஷல் மீமான் 25 வயது இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாடியதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அப்படி விளையாடிய போது திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் அந்த இளைஞர் மரணமடைந்தார்.
இதனால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இளைஞர்கள் மொபைல்/கணினிகளில் விளையாடுவது தவறில்லை.
ஆனால் அதிக நேரம் செலவழித்து விளையாடினால் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட அதீத வாய்ப்புள்ளது.