தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து தமிழிசை சவுந்தர ராஜன் குறைகளை கேட்டு வருகிறார். அரசின் திட்டங்கள் குறித்தும் அவ்வப்போது அவர் ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று தனியார் பேருந்து ஒன்றில் பயணிகளோடு தமிழிசை பயணம் மேற்கொண்டார். அப்போது பயணிகளிடம், புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகள் எவ்வாறு இருக்கின்றன என்றும், பழுதாக உள்ளதா என்றும், சரியான நிலையில் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.