புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்து வந்த கிரண்பேடி,மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எழுந்ததால் நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாகக் கவனிப்பார் அறிவிக்கிக்கப்பட்டிருந்தது. அதன்பின் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைக்குப் பதில் மூன்று முட்டைகளை வழங்க தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி (பொறுப்பு) துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று முட்டை தருவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்துக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள 29,846 குழந்தைகளுக்கு இனி மூன்று முட்டைகள் வழங்கப்பட உள்ளது.