தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் அதிகளவு கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு இந்திய ரயில்வே முக்கிய வழித்தடங்களில் 85 ரயில்களை ரத்து செய்து அறிவித்துள்ளது.
அதேபோன்று, பொதுமக்களும் தங்களது முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தேவையின்றி ரயில் நிலங்களை கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பிளாட்பார்ம் டிக்கெட் விலையை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரித்துள்ளது இந்தியன் ரயில்வே. இது தற்காலிகமானது தான் என்றும் இந்த மாத இறுதி வரை இந்த விலை அதிகரிப்பு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
இதேபோன்று கொரோன வைரஸ் பாதிப்பு தொடர்பாக பரிசோதனை செய்ய தற்காலிகமான ஆய்வுக்கூடங்கள் முக்கிய சந்திப்புகள் மற்றும் அனைத்து பெட்ரோல் நிலையங்களில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.