சென்னை:
ரயில் நிலையங்களில் நடை மேடை பயண சீட்டு வருவாய் 2019 – 2020 நிதி ஆண்டில் 161 கோடி ரூபாய் இருந்தது .
2020 – 2021 நிதி ஆண்டில் 10 கோடி வருவாய் மட்டுமே வசூலாகி உள்ளது . இதன் மூலம் 94 சதம் வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக ரயில்வே துறை ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நடை மேடை பயண கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தியது .
பொது முடக்கம் மற்றும் நடை மேடை பயண கட்டணம் உயர்த்தியதால் மூலம் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததால் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுக்கட்டணம் மீண்டும் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைமேடை சீட்டுக்கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.