புவனேஷ்வர்:-
இரு தலைகளை கொண்ட அரிய பாம்பு ஒடிசாவில் ஒரு வீட்டில் இருந்து பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் டேன்கிகோட் (Dehnkikote) வனப்பகுதி அருகே ஒரு வீட்டில் இரட்டை தலைப் பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் தெஹ்ன்கிகோட் வனப்பகுதி வரம்பில் உள்ள ஒரு வீட்டிலிருந்து முழுமையாக உருவான இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு அரிய ஓநாய் பாம்பு மீட்கப்பட்டது என்று வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, பாம்பின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பாம்பு நான்கு கண்கள் மற்றும் இரண்டு நாக்குகள் உள்ளன. ஆனால், ஒரே உடல் மட்டுமே கொண்டுள்ளது. நம்ப முடியாத அளவு இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சுயமாக செயல்படுகின்றன. அவைகள் தனக்கான உணவுக்காக தனித்தனியாக போராடுவதைக் காணப்பட்டுள்ளது.