ரத்தன் டாடா இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவர் மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருப்பவர். பல சமூக பணிகளை செய்து மக்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என அவரது அபிமானிகள் ட்விட்டரில்கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பார்த்த ரத்தன் டாடா தனக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை நிறுத்துமாறு, தனது அபிமானிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக ஊடகங்களில் ஒரு பகுதியினர், விருது தொடர்பாக வெளிப்படுத்திய உணர்வுகளை மதிக்கிற அதேவேளையில், இதுபோன்ற பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும் அவர், “இந்தியனாக இருப்பதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் பங்களிக்க முயற்சி செய்வதற்கும், நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.