பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் நெருங்கிய உறவினரான அப்துல்லா கான் (38) நேற்று இரவு மரணமடைந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள திருபாய் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் பாந்திராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவருக்கு கொரோனா, நீரிழிவு நோய் என்றும் நுரையீரல் கோளாறு இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவரது குடும்பத்தினரை இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.
அப்துல்லா கான் மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தற்போது கோரோனா வைரஸ் பரவல் காரணமாக சல்மான்கான் தனது பண்ணை வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.