இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது.
தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அடுத்தடுத்து பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள்,அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.