ஜெய்பூர்:-
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு SOG நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருக்கு சொல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறியது குறித்து ராஜஸ்தான் மாநில போலீஸின் சிறப்பு போலீல் படை (Special Operation Group) நோட்டீஸ் வழங்கியுள்ளது. சச்சின் பைலட்டை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் முதல்வர் கெலோட் ஈடுபடுவதாக பைலட் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை கெலேட் மறுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், தலைமை கொறடா மற்றும் சில எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக பாஜகவை சேர்ந்த அசோக் சிங், பாரத் மலானி ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மூன்று பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான விசாரணைக்காகவே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.