கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவுக்கு செல்லும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் சில பேருக்கு நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் சீனாவுக்கு செல்லும் விமானங்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இண்டிகோ மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் டெல்லி- சீனா, பெங்களூர் – ஹாங்காங் இடையேயான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், கொல்கத்தா- குவான்ஸ்வோ இடையேயான விமான சேவை தொடர்ந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சீனாவுக்கான தங்களின் விமான சேவையை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.