உலோக வடிவில்லாத, காகித வடிவ தங்க பத்திர முதலீட்டுத் திட்டம் நாளை தொடங்குகிறது.
காகித வடிவில் தங்க மூதலீடு திட்டம் நாளை(நவம்பர் 29) தொடங்குகிறது. இந்த தங்க பத்திரங்களை வங்கிகள், சிறிய நிதி வங்கிகள், பங்குச் சந்தைகள், தபால் அலுவலகங்கள் மூலம் தங்கப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. முதலீடு செய்யக்கூடிய தங்கப் பத்திரத்தின் மதிப்பு கிராமுக்கு 4,791 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
தங்க முதலீட்டுப் பத்திரங்கள் மீது ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
மேலும், 7 ஆண்டு முதிர்வு கொண்ட தங்கப் பத்திரத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தேதியில் பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.