தொலைத்தொடர்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மித்தல் தெரிவித்திருக்கிறார்.
ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை அவர் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏர்டெல் ஏற்கனவே பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியுள்ள நிலையில், பாக்கித் தொகையும் விரைவில் செலுத்தப்படும் என்றார்.
AGR (Adjusted Gross Revenue) எனப்படும் மொத்த வருவாயில் இருந்து அரசுக்கு விகிதாச்சாரம் செலுத்தும் நிலை குறித்து அமைச்சருடன் விவாதித்ததாக குறிப்பிட்டார்.
இதேபோல வோடஃபோன்-ஐடியா நிறுவனம் தோலைதொடர்பு துறைக்கு (DoT)-க்கு 3,500 கோடி ரூபாய் நிலுவைத் தொவை செலுத்த வேண்டியுள்ளது.